ஒரு vaaippu வேண்டும்

படித்த புஸ்தகத்தைத் தூக்கி
இருக்கையில் போட்டு அக்காடா
என்று உட்கார நினைத்தால்
அங்கொரு விட்டில் பூச்சி மேல்
புஸ்தகம் சரியாக விழுந்து
விட்டில் செத்து விட்டது...

ஈமக் கிரியையா செய்ய முடியும்?
தாளைக் கிழித்து தூக்கிப் போட்டு
கை அலம்ப வேண்டியது தான்...
ஆனாலும், ஒரு நெருடல்..
என் ரூபத்திலா அதற்கு எமன் தெரிய வேண்டும்?

என்னுடைய மரணமும் இப்படித் திடீர் என்று தானோ?
மரணத்துக்குப் பின் விட்டில் எங்கு போகும்?
இத்தனை நாள் விட்டிலாகப் பிறந்தது எதற்காக?
பறந்து பறந்து எதைக் கொண்டு போனது?
வாழ்க்கைப் புதிர் பிடிக்க வில்லை...

ஆனாலும் வாழ வேண்டும்
வாழ்க்கை இருக்கும் வரை...
விதி சரியில்லை, நேரம் ஆகி விட்டது என்று
சொல்லி விட்டாவது போக
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம்...


எழுதியவர் : (13-Apr-11, 6:53 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 645

மேலே